ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைவதற்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. ஆழ்வார்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் வழியில் அக்னி தீர்த்தக்கரை உள்ளது. இங்கு சித்தர்கள் பீடமும், அக்னி தீர்த்தமும், சிவன், பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலும் உள்ளது. இங்கு அகஸ்தியர் ஜீவநாடி உரைப்படி சித்தர்கள் முறைப்படி மஹாளய அமாவாசை நாள் மாலை பித்ருக்கள் முக்தி அடைவதற்காக மோட்ச தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக விநாயகர் சிவன், பாலசுப்பிரமணியர், அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.