மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில், நவராத்திரி கலைவிழா நடந்து வருகிறது. அக்., 14ம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சியில், தினமும் மாலை 6 மணிக்கு, கொலு அலங்காரம் செய்து, பக்தர்களின் பார்வைக்கு வைப்பர். இன்று முதல் அக்., 14 வரை, இனி காலையிலும், கொலு அலங்காரம் பக்தர்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்படும், என, நிர்வாக அலுவலர் ஜெயராமன் தெரிவித்தார்.