பதிவு செய்த நாள்
08
அக்
2013
11:10
திருநெல்வேலி: பாளை., தியாகராஜநகர் சாரதாம்பாள் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தியாகராஜநகர் சிருங்கேரி சாரதா பீடத்தில் வித்யா கணபதி, ஆதி சங்கரர், சாரதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சரந் நவராத்திரி மஹோத்ஸவம் கடந்த 4ம் தேதி துவங்கியது. 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை தினந்தோறும் லட்சார்ச்சனை, தேவி மகாத்மியம், வேத பாராயணங்கள் நடந்து வருகிறது. 17ம் தேதி நவசண்டி ஹோமமும், 18ம் தேதி சாரதாம்பாளுக்கு அபிஷேகமும் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலியும், லட்சார்ச்சனை சமாப்தியும் நடக்கிறது. கலை நிகழ்ச்சி நேற்று மாலை தியாகராஜநகர் சாரதா மகளிர் மன்றம் சார்பில் பஜனை நடந்தது. இன்று (8ம் தேதி) மாலை 6.30 மணிக்கு மதுரை பாரதி மகாதேவன் மாணவிகள் பக்தி இன்னிசை, 9ம் தேதி பாலபள்ளம் முருகன் வயலின் இசையும், 10ம் தேதி வந்திக்கு அருளி சுந்தரர் என்ற தலைப்பில் மதுரை வெங்கடசுப்பிரமணியன் பக்தி சொற்பொழிவும், 11ம் தேதி தியாகராஜநகர் சாரதா மகளிர் மன்றம் பக்தி இன்னிசையும், 12ம் தேதி லட்சுமி முத்துக்கிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவிகளின் பக்தி இன்னிசையும், 13ம் தேதி தியாகராஜநகர் நடராஜன் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்