திருவேங்கடம்: கரிவலம் வந்தநல்லூர் தேவர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட ராஜகணபதி, உச்சிமாகாளி, வடக்கத்தி ராக்கு சத்தி பேச்சியம்மன் கோயில்களில் புரட்டாசிப் பொங்கல் திருவிழா 9 நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை காப்புகட்டி பொங்கல் சாட்டுதலுடன் பொங்கல் திருவிழா ஆரம்பமானது. திருவிழா நாட்களில் தினமும் இரவு சுவாமி அம்மன்களுக்கு பல்வேறு அபிஷேக, அலங்கா தீபாராதனை நடந்தது. 8ம் நாள் மாலை குற்றாலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று சுவாமி அம்மன்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 9ம் நாள் காலை சுவாமி, அம்மன்களுக்கு பெண்கள் ஆங்காங்கு பொங்கலிட்டு வழிபட்டனர். மாலையில் மேளதாள வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலமாக வீதியுலா வந்து கங்கையில் கரைத்தல் நடந்தது. ஏற்பாடுகளை கரிவலம்வந்தநல்லூர் தேவர் சமுதாய பொதுமக்கள் விழாக்கமிட்டியார், உபயதாரர்கள் செய்திருந்தனர்.