காஞ்சிபுரம்: நவராத்திரி உற்சவத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் பத்மாசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த வெள்ளிகிழமை நவராத்திரி விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலையில் நவாவர்ண பூஜையும், மதியம் இரண்டு மணிக்கு கன்னிகா பூஜையும் நடந்தது. மாலையில் காமாட்சி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மூலவர் கோலத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து, இடது பக்கம் லட்சுமியும், வலது பக்கம் சரஸ்வதியுடன் கொலு மன்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் எழுந்தருளினார். அங்கு சூரசம்ஹாரம் முடிந்தபின், உற்சவர் மண்டபத்திற்கு திரும்பினார். அதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் யதோத்தகாரி கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில், கோமளவல்லி தாயாருடன் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.