Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முரளிகிருஷ்ணர் கோலத்தில் காஞ்சி ... திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் நடைபாதை ஆக்கிரமிப்பு! திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் வளாகத்தில் கொடி கம்பம்: பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 அக்
2013
06:10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் ஒரு சமூகத்தினர் கொடி கட்டப்பட்டுள்ளதால் பக்தர்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காமாட்சியம்மன் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள ஆதிகாமாட்சி என்று அழைக்ககூடிய ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில்  உள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் உருவானதற்கு முன்பே இருந்த கோவில். ஒரு காலத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. பரம்பரை  பரம்பரையாக அந்த சமூகத்தினர் மட்டுமே அறங்காவலராக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்து சமய அறநிலை துறை நிர்வாகத்தின் கீழ் வந்த பின்னர் கோவில் செயல் அலுவலர் அனுமதி பெற்று விழாக்களோ, வேறு விசேஷங்களோ நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் அந்த சமூகத்தினர் விழா மற்றும் விளக்கு பூஜை நடத்துவதற்காக கோவில் உள் பிரகாரத்தில் கல்தூணில் வாழை கட்டி கொடியும் கட்டியுள்ளனர். தற்போது அனைத்து சமூகத்தினரும் வழிபடும் கோவிலாக உள்ளதால் குறிபிட்ட சமூகத்தினர் வழிபாட்டு தலத்தில் கொடி கட்டியதால் பக்தர்கள் மத்தியில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பக்தர் சேகர் கூறுகையில் அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் ஒரு குறிபிட்ட சமூகத்தினர் கொடி கட்டி விழா கொண்டாடியதால் மற்ற சமூக பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. இதற்கு சம்மந்தபட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில் பல ஆண்டுகளாக விஸ்வகர்மா சமூகத்தினரால் இக்கோவில் நிர்வாகம் இருந்து வந்தது. அறங்காவலராக அவர்கள் மட்டுமே இருக்க முடியும். இருப்பினும் எந்த விழா நடந்தாலும் செயல் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும். கொடி கட்டிய விபரம் எனக்கு தெரியாது. அதை எடுத்து விட சொல்கிறேன் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar