திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் நடைபாதை ஆக்கிரமிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2013 10:10
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சுவாமி கோயில், நடை பாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் பக்தர்கள் நடந்து செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. திருப்புல்லாணியில், 108 வைணவ தலங்களில் ஒன்றான, ஆதிஜெகநாத பெருமாள் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அக்., 5ல் நவராத்திரி திருவிழா துவங்கியது. இதனால் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. தெற்கு பகுதி வாசலில், பக்தர்களுக்கு இடையூறாக வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். மக்கள் நடந்து செல்ல சிரமம் அடைவதுடன், கோயிலின் வாசல் தூண்கள் மறைக்கும் வகையில் கடைகள் உள்ளன. கோயிலின் புனிதம் பாதுகாக்க, நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.