Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியின் 2வது ரோப் கார்: டெண்டர் தேதி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தள்ளாட்டத்தில் தவிக்கும் கலைப் பண்பாட்டுச் சின்னமான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2013
10:10

தஞ்சை: தலையாட்டிப் பொம்மைகளை தஞ்சையின் கலைப் பண்பாட்டுச் சின்னம் என்கிறார்கள். இந்த பொம்மைகள் செய்வதற்காகவே தஞ்சையில் தலையாட்டி பொம்மை தெரு என்று ஒரு தெருவே இருந்தது. இங்கே செய்யப்பட்ட தலையாட்டி பொம்மைகள், வெளிநாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்த காலங்கள் போய் இப்போது உள்ளூரிலேயே கேட்பரில்லை. இதனால், இந்தத் தொழிலில் இருந்த பல குடும்பங்கள் மாற்றுத் தொழில்களைத் தேடி இடம் பெயர்ந்துவிட்டன. நான்கைந்து குடும்பங்கள் மட்டுமே இப்போது தலையாட்டிப் பொம்மைகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றன- அதுவும் கஷ்ட ஜீவனத்தில். ஒரு காலத்துல தஞ்சையில முந்நூறு குடும்பங்கள் இந்தத் தொழில்ல இருந்தாங்க. பொம்மைகளோட அருமை தெரிஞ்சதால் கிராக்கியும் இருந்துச்சு. பொம்மை செய்யுற குடும்பங்களும் நல்லா வாழ்ந்தாங்க. ஆனா, சீன பொம்மைகளின் வரவும், பிளாஸ்டிக் மோகமும் இந்த பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுருச்சு. ஒரு அருமையான கலை, அழிவுப் பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளது.

தலையாட்டி பொம்மைகளை செஞ்சுக்கிட்டு இருந்த பலபேர், இப்ப சித்தாள் வேலைக்கும் கொத்தனார் வேலைக்கும் கௌம்பிட்டாங்க. காலையில பத்து மணிக்கு போறாங்க. அஞ்சு மணிக்கு திரும்பிடுறாங்க. ஒரு மணி நேரம் ஓய்வோட 350 ரூபாய் சம்பளம் கிடைக்கிறப்ப பொம்மைத் தொழிலை எதுக்கு பாக்கணும்னு நினைக்கிறாங்க. இந்தப் பொம்மைகளோட அருமை தெரிஞ்சவங்க, செட்டிநாட்டு ஆச்சிமார்கள்தான். தங்கள் வீட்டுத் தவழும் குழந்தைகள் தஞ்சாவூர் பொம்மையை வைச்சு விளையாடணும். அதுககையால அந்த பொம்மைகள் உடைக்கணும்னு ஆச்சிமார்கள் ஒரு ஐதீகம் வைச்சிருக்காங்க. அவங்கதான் தேடித்தேடி வந்து இந்த பொம்மைகளை வாங்கிட்டுப் போறாங்க. இந்த தொழிலுக்கு வங்கியில் கடன் உதவி கேட்டுப் போனால் இதுக்கெல்லாம் கடன் தரமுடியாது என்று சொல்லி கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக துரத்துகிறார்களாம். 1999 லேயே புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள் மீது அரசின் கருணைப் பார்வை பட்டால்தான் உண்டு என்கிறார்கள் பொம்மையை நம்பி இருக்கும் மனிதர்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar