திருவள்ளூரில் இரண்டு கோயில்களில் ஏழு கலசங்கள் திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2013 10:10
திருவள்ளூர் கோட்டை ஆறுமுக சுவாமி கோயிலில் உள்ள முருகன் சன்னதி, விஜயராகவ பெருமாள் சன்னதி, விநாயகர் சன்னதி, விஜயலட்சுமி தாயார் சன்னதி ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஆறு கலசங்கள் மற்றும் மற்றொரு உபகோயிலான வீரட்டீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கலசம் ஆகியவற்றை வியாழனன்று இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இக் கோயில் திருத்தணி முருகன் கோயிலுக்குச் சொந்தமானது. கோயிலின் இணை ஆணையர் புகழேந்தி அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடுவதுடன், திருடு போன கலசங்களின் மதிப்பு குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.