Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றித்திருநாளான விஜயதசமி கோலாகல ... தினசரி 5,000 பேருக்கு உணவளிக்கும் அன்ன ஆலயம்! தினசரி 5,000 பேருக்கு உணவளிக்கும் அன்ன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதையல் தேடும் பணியில் தொல்லியல் துறை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 அக்
2013
09:10

உன்னாவ்: பழங்கால, சிதலமடைந்த கோட்டையின் கீழ், ஏராளமான தங்கப் புதையல் இருப்பதாக, துறவி ஒருவர் கனவு கண்டதை, வெளியே கூறியதை அடுத்து, தொல்லியல் துறை அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தயாராகி வருகிறது. உத்தர பிரதேசத்தின் உன்னாவ் என்ற இடத்தில், 1857ம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு எதிராக, அப்பகுதியை ஆண்ட, ராஜா ராவ் ராம்பக்ஸ் சிங் என்பவர் போரிட்டார். தவுடியா கோட்டையைத் தகர்க்க, ஆங்கிலேயர்கள் தாக்குதல் நடத்தியபோது, ராம்பக்ஸ் சிங் இந்தக் கோட்டையில் தான் தங்கியிருந்தார். அவரை, கைது செய்த ஆங்கிலேயர்கள், அவருடைய சொத்துக் கணக்கை கருவூல பதிவேட்டில் பதிவு செய்தனர். அதில், 4,000 தங்க நாணயங்கள், கோட்டையின் அடியில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்ததாம். தவுடியா கோட்டையின் கீழ், ஏராளமான, தங்கம், வைரம் போன்றவற்றை புதைத்து வைத்திருப்பதாக, ÷ஷாபன் சர்க்கார் என்ற துறவி, மூன்று மாதங்களுக்கு முன், கனவு கண்டுள்ளார்.

இந்தக் கோட்டையில், 1,000 டன் எடையுள்ள, 4,000 தங்க நாணயங்கள் புதைத்து வைத்திருப்பதாக, தான் கனவில் கண்டதை, மாநில அரசுக்கும், மத்திய அரசின் விவசாயத் துறை அமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் கடிதம் எழுதினார். இதையடுத்து, கடந்த வாரம், மாநில அரசுக்கு, மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது. அதில், துறவி கூறுவது உண்மை தானா என, ஆராயுமாறு உத்தரவிடப்பட்டது. அதையடுத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படும், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதையலைத் தேடும் பணியில், மாநில அரசின் ஒத்துழைப்புடன் தொல்லியல் துறை ஈடுபட உள்ளது.தௌடியா கோட்டையில், 15ல் இருந்து 20 அடி ஆழத்தில் தங்க நாணயங்கள் புதைத்து வைத்திருக்கக் கூடும், என, அதிகாரிகள் கருதுகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதையல் குறித்த தகவல்களை சேகரித்த தொல்லியல் துறை, 18ம் தேதி, அகழ்வாராய்ச்சியைத் துவக்க திட்டமிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.அக்னி நட்சத்திர காலம்; முன்னொரு ... மேலும்
 
temple news
கடலுார்; சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், உத்தராகாண்ட் மாநிலம், கிஷ்கிந்தா சமஸ்தானம், ஸ்வர்ணஹம்பியில் உள்ள ஸ்ரீ ஹனுமத் ஜன்ம பூமி ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சித்திரைப் பெருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவில், 63 நாயன்மார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar