Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு கோட்டை ஈஸ்வரன் கோவில் வரும் 18ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை கோவில் செல்லும் சாலை மோசமானதால் பக்தர்கள் சிரமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
11:10

சென்னிமலை: சென்னிமலை, மலை மீது அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, மிக மோசமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். உலக முழுவதும் உள்ள முருக பக்கதர்கள் பரயாணம் செய்யும் "கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருதலம், சென்னிமலை முருகன் கோவிலாகும். இங்கு உள்ளூர் பக்தர்கள் மட்டும் இன்றி, பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக, செவ்வாய்கிழமை அதிகாலை கோபூஜைக்கும், இரவு வேங்கை மர தேரோட்டத்துக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். பல வரலாற்று சிறப்புகள் கொண்ட சென்னிமலை, மலை கோவிலுக்கு செல்ல, 1,320 படி வழியாகவும், பக்தர்கள் வசதிக்காக போடப்பட்டுள்ள தார் வழியாகவும், மலை கோவிலுக்கு செல்லலாம். தற்போது அதிக அளவில் வெளியூர் பக்தர்கள் வருவதால், அதிக அளவில் தார் சாலை தான் பயன்படுகிறது. மலை மீது செல்லும் தார் சாலை, நான்கு கிலோ மீட்டர் கொண்டதாகும். மொத்தம், ஒன்பது கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட, இந்த தார் சாலை, தற்போது மிகவும் மோசமாக, குண்டும், குழியுமாக, பல இடங்களில் தார்சாலை சுவடு தெரியாத அளவு சேதமாக உள்ளது. இதனால் தார் சாலை வழியாக இருசக்கர, நான்கு சக்கர வானங்களில் செல்லும் பக்தர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பக்தர்கள் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. முன்பு இருந்து, அறங்காவலர் குழு தலைவர் யூ.ஆர்.சி., கனகசபாபதி, பல முறை இந்த சாலையை சீர் அமைத்தார். இருந்தும் மழை காலங்களில், மண் அரித்து சென்றது. தற்போது அவரும் பொறுப்பில் இல்லை. இச்சாலையை சீரமைக்க, பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: திருப்பணிகள் நிறைவு பெற்ற பின், தார்சாலை புதிதாக போட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதை விரிவுபடுத்தவும், வனத்துறையிடம் பேசி வருகிறோம். விரைவில் நிறைவு பெறும், என்றனர். வாரம்தோறும் செவ்வாய் கிழமைகளில், ஊரில் இருந்தால், இக்கோவிலுக்கு கட்டாயம் வருகைபுரியும், வருவாய்த்துறை அமைச்சர் தோப்புவெங்கடாசலம் முயன்றால், சில நாட்களில், இங்கு புதிய சாலையை அமைக்க முடியும். ஆனால், அவரும் மனது வைக்கவில்லை, என, பக்தர்கள் வருந்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar