Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொல்லங்குடி கோயிலில் அம்பு எய்தல் ... இளையான்குடி பள்ளிவாசல்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலைய துறை அறிவிப்பு ரத்து கோரி மாநாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
11:10

சென்னை: கோவில்மனை குடியிருப்போருக்கு, அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கம் சார்பில், வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு, வரும், 20ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இது குறித்து, கோவில் மனை குடியிருப்போர் சங்க தலைவர், பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், தமிழ்நாடு முழுவதும், லட்சக்கணக்கானோர், தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இன்று வரை, குடியிருப்பு மனைப்பட்டா கிடைக்கவில்லை. நடைமுறையில் இருந்த, பகுதி கட்டணத்தை, கடந்த ஆட்சியில், சதுர அடி கணக்கில், வாடகை மாற்றம் செய்யப்பட்டது. மேலும், 2004ல்,வெளியிடப்பட்ட அரசாணை, 131ன் படி, கோவில் மனையில் குடியிருப்பவர் தன் சொந்த செலவில், கட்டப்பட்ட கட்டடத்தை, கோவிலுக்கு தானமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என, தற்போது செயல் அலுவலர்களால் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சூகட்டடத்தை தானமாக எழுதிக் கொடுக்க தவறினால், குத்தகை ரத்து செய்யப்படும்; உடனே மனையை விட்டு வெளியேற வேண்டும்; தவறினால் அபராதத் தொகை கட்ட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரி, சென்னை, பாடியில் உள்ள, மண்ணூர்பேட்டை வியாபாரிகள் கல்யாண மண்டபத்தில், வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு, வரும், 20ம் தேதி, மாலை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள கோவில் மனை குடியிருப்போர் நல சங்கங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோயிலில், கிருத்திகை பூஜைகள் நடந்தன.சிறுமுகை அருகே ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருநாவாயா பாரதப்புழா நதியில் நடந்து வரும் கும்பமேளாவில், இன்று ‘களரி அட்சரக்கால்’ பூஜை ... மேலும்
 
temple news
திருப்பூர்: பெருமாநல்லுார் அருகேயுள்ள ஆலங்காடு முத்தாரம்மன், பட்டத்தரசி அம்மன் கோவிலில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar