Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி பள்ளிவாசல்களில் பக்ரீத் ... வேதாரண்யம் கோவிலில் லட்சார்ச்சனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
11:10

தஞ்சாவூர்: தி.பூண்டி, தஞ்சை பகுதிகளிலுள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள், நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை பெரியகோவிலில் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷங்கள் வெகு விமரிசையாக நடக்கும். ஓராண்டில், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது அரிது என்பதால், அன்றைய தின சிறப்பு பூஜையில் மட்டும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்பர். நடப்பாண்டில் இதுவரை, 3 சனிப்பிரதோஷ வழிபாடு நடந்துள்ளது. வரும் டிச., மாதம் நிறைவுக்குள், இன்னும், 2 சனி பிரதோஷ வழிபாடு நடக்கவுள்ளது. சனிக்கிழமை தவிர, மற்ற கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாட்டில், பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்படும். பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. இதில் பாலாபிஷேகம், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்வித்து, தீபாராதனை காண்பித்து, சிறப்பு பூஜைகள், 2 மணி நேரம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருத்துறைப்பூண்டி: பிறவி மருந்தீஸர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் எழுந்தருளி, பலி போட்டு பிரகாரம் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். ஏற்பாட்டை கோவில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்திருந்தனர். இதேபோல, திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி அமிர்தவள்ளிநாயகி உடனுறை மணிகண்டேஸ்வரர் ஸ்வாமி கோவில், கள்ளிக்குடி நாகநாதசாமி ஸ்வாமி கோவில், நெடும்பலம் காசிவிஸ்வநாதர் ஸ்வாமி கோவில், பேளூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் ஸ்வாமி கோவில், தண்டலச்சேரி நீதிநெறிநாதர் ஸ்வாமி கோவில், கச்சனம் கைக்கினேஸ்வரர் ஸ்வாமி கோவில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இவற்றில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar