Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விவேகானந்த மண்டபத்தை ஒரே ஆண்டில் 20 ... மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு தொழுகை: இறைச்சி தானம் செய்த இஸ்லாமியர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
11:10

சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு இறைச்சி தானம் செய்தனர். இஸ்லாமியர்களின் தியாக பண்டிகையான பக்ரீத், நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இது தவிர, திடல்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், இஸ்லாமியர் ஏராளமானோர் கூடி, தொழுகை நடத்தினர். சென்னை, பிராட்வே, டான்பாஸ்கோ பள்ளியில், த.மு.மு.க., சார்பில் சிறப்புத்தொழுகை நடந்தது. இதில், ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். மூத்த தலைவர் ஜவஹாருல்லா எம்.எல்.ஏ., பேசுகையில், ""மனிதநேயம் தழைத்தோங்கவும், நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும், குறிப்பாக, இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் நிம்மதியாக வாழ பிரார்த்தனை செய்வோம். நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் அன்னிய சக்திகளை முறியடிப்போம், என்றார். சென்னை தீவுத்திடலில், தென்னிந்திய இஷா அத் அத்துல் இஸ்லாம் சபை சார்பிலும், ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில், சிறப்புத் தொழுகை நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது. பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள், ஆடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுத்து, ஏழைகளுக்கு இறைச்சி தானம் செய்தனர். உறவினர்கள், நண்பர்களுக்கு பிரியாணி கொடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar