Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன் கோவில்களில் பவுர்ணமி ... கிணத்துக்கடவில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் தெருக்களில் போலீஸ் அமைத்த தடுப்பு சுவர்: மக்கள் அவதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2013
11:10

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் தெருக்களில், போலீசார் தடுப்புச்சுவர் அமைத்து பாதையை மறித்ததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ராமேஸ்வரம் கோயில் பாதுகாப்பு கருதி, நான்கு ரதவீதிகளில் கார், ஆட்டோ செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால், "கார் பார்க்கிங் பகுதியில் இருந்து பக்தர்கள் நடந்தும், பேட்டரி கார் மூலம் கோயிலுக்கு வந்தனர். இந்நிலையில் உள்ளூர் மக்கள், டூவீலரில் செல்பவர்கள் கோயில் நான்கு ரதவீதி வழியாக செல்ல முடியாதபடி, ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கும் நகராட்சி 20, 21வது வார்டில் உள்ள களவாய் தெரு, மறவர் தெரு, மண்டித்தெரு, கிழக்கு தெரு, இத்தி தெரு, அக்னி தீர்த்த கரையில் உள்ள நகராட்சி ரோட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவில், போலீசார் 2 அடி உயர தடுப்பு சுவர் எழுப்பினர். இதனால், அப்பகுதி மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்தனர். நகராட்சி குப்பை வண்டி, தெருக்களில் செல்ல முடியவில்லை. தடுப்புச்சுவர் எழுப்பியதை கண்டித்து, மக்கள், நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மோகன்ராஜ் கூறியதாவது: கிழக்கு தெரு, களவாய் தெரு உள்ளிட்ட 4 பாதைகள் வழியாக டூவீலர் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, சிமென்ட் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு இருக்காது, என்றார். நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறியதாவது: நகராட்சி அனுமதியின்றி, சாலையில், தெருக்களில் தடுப்புச்சுவர் அமைத்ததால், உள்ளூர் மக்கள், பக்தர்கள் சிரமம் அடைவதுடன், குப்பை அள்ளும் வாகனங்களும் செல்ல முடியவில்லை. தடுப்பு சுவர், உடனடியாக அகற்றப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar