காஞ்சி கேரள சமாஜ சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. காஞ்சி கேரள சமாஜ சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஓணம் பண்டிகையின் மகத்துவம் குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. மலையாள மொழி மற்றும் கலாசாரப் பண்பாட்டு பாரம்பரியமிக்க கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.