விருத்தாசலம்: விருத்தாசலம் மணவாளநல்லூர் சித்தி விநாயகர் சமேத கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. மாலை வெள்ளித்தேரில் உற்சவர் உட்பிரகார வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெண்ணாடம் சாலை வேடப்பர் சுவாமி கோவிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.