Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவசைலம் கோயிலில் 30ம்தேதி ... சுவாமி விவேகானந்தர் ரதம் வருகை: பொதுமக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு! சுவாமி விவேகானந்தர் ரதம் வருகை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியம்மன் கோவிலில் கொள்ளை போன 150 ஆண்டு சிலை மீட்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 அக்
2013
10:10

சென்னை: விச்சூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இருந்து கொள்ளை போன, 150 ஆண்டு பழமையான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது. இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மணலி புதுநகரை அடுத்த, விச்சூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐம்பொன்னாலான மூன்று அடி உயரம் கொண்ட உற்சவர் சிலை இருந்தது. கொள்ளை கடந்த, 9ம் தேதி காலை பூஜை செய்ய பூசாரி துரை சென்ற போது, கோவில் கதவு உடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, 17 உருப்படிகள் கொண்ட, 5 சவரன் நகைகள், உண்டியலில் இருந்த, 20 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, மணலி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து, சிலை திருடர்களை தேடி வந்தனர். மாதவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட இடங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் விவரங்களை சேகரித்தனர். சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த பழைய குற்றவாளிகளான, புழல், காவாங்கரையை சேர்ந்த ரூபன், 27, அதே பகுதியை சேர்ந்த ராஜா, 31, ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். தங்கச்சிலை இருவரும், விச்சூர் செல்லியம்மன் கோவிலை சில நாட்கள் நோட்டமிட்டு, கோவில் கதவின் பூட்டை கடப்பாரையால் நெம்பி, அம்மன் நகைகளை திருடினர். அப்போது, உற்சவர் சிலை பளபளப்பாக இருந்ததால், தங்கச் சிலை என நினைத்து, அதை கடத்தி, புழல் ஏரியில் புதைத்து வைத்ததை ஒப்புக் கொண்டனர். சிறையில் அடைப்பு அவர்கள் கொடுத்த தகவலின்படி, ஆர்.டி.ஓ., முன்னிலையில், ஏரியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த உற்சவர் சிலையை போலீசார் நேற்று முன்தினம் மீட்டனர். அந்த சிலை, விச்சூர் செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என தெரிந்தது. அந்த சிலை, 150 ஆண்டு பழமையானது என்பதை, சிலை தடுப்பு பிரிவு போலீசார் உறுதிப்படுத்தினர். கைதான ரூபன், பெரிய பாளையம், வெங்கல், மாதவரம் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டு வழக்குகளில் சிக்கி சிறை சென்றது தெரிந்தது. ராஜா, கஞ்சா புகைப்பதற்காக சிறிய திருட்டுகளில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான இருவரும், நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar