Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 300 ஆண்டு பழமையான கோவில் ... மதுரையில் தேவார தமிழிசை மாநாடு! மதுரையில் தேவார தமிழிசை மாநாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறுதி கட்டத்தில் நரசிங்கப்பெருமாள் கோயில் தேர் பணி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2013
10:10

ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், புதிய தேர் செய்யும் இறுதிக்கட்ட பணிகள் துவங்கி உள்ளது. ஜம்புலிபுத்தார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் புதியதேர் செய்யும் பணி ரூ.17 லட்சம் செலவில் 2005ல் துவங்கியது. மதுரை மீனாட்சி கோயில் நிதியில் ரூ.17 லட்சம் செலவில் இக்கோயிலுக்கான தேர் செய்யும் பணி முடிந்தது. திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கு இரும்பு சக்கரங்கள் தேரில் பொருத்தப்பட்டுள்ளன. புதிய தேர் 27 அடி உயரம், இரும்பு அச்சுக்கு மேல் ஐந்து அலங்கார அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மா அடுக்கான முதல் அடுக்கில் கதலிநரசிங்கப்பெருமாள், சிவன், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பமும், கோண அடுக்கான 2ம் அடுக்கில் சிற்ப வேலைகளும், 3ம் அடுக்கில் பெருமாளின் அவதாரம், 4ம் அடுக்கில் தேவாசனம் மற்றும் ஆழ்வார் அவதாரம், 5ம் அடுக்கில் உற்சவர் அமரும் சிம்மாசன பீடம் மற்றும் தசாவதார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேருக்கான இறுதி கட்டப்பணிகளை விரைவில் முடிக்க, அறநிலையத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு, மார்ச் 29ல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.பெயின்டிங் வேலைகள் துவங்காததால், கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த சில மாதங்களாக தேரின் இறுதிக்கட்ட பணிகளை முடிக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது பணிகள் மீண்டும் துவங்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் தேரின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து தேர் பாதுகாப்பாக நிறுத்தப்படும், என்று இந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar