Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற ... தீபாவளி திருநாளின் பிற சிறப்புகள்! தீபாவளி திருநாளின் பிற சிறப்புகள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளி நம்பிக்கைகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 அக்
2013
01:10

1. தீபாவளி நாளில்தான் திருப்பாற்கடலில் மகாலட்சுமி அவதரிததாள். அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் வீடுகளில் நெய் கொண்டு தீபங்கள் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் அவளது அருள் எளிதல் கிடைத்து செல்வச் செழிப்பு மேலோங்கும் என்கிறார்கள்.

2. வட மாநிலங்களில் சில பகுதிகளில் தீபாவளி அன்று ரங்கோலி எனப்படும் வண்ணக் கோலமிட்டு தங்கள் வீட்டு முற்றத்தை அலங்கரிக்கிறார்கள். மஞ்சள், சிவப்பு, காவி ஆகிய மூன்று நிறங்களை கொண்டதாக இந்த கோலம் அமைகிறது. இப்படி கோலம் இடுவதால் மகாலட்சுமி தங்கள் வீட்டில் குடியேறி வாசம் செய்வாள் என்று நம்புகிறார்கள்.

3. தீபாவளிக்கு மறுநாள் குஜராத் மக்கள் நிறைய உளுந்து வடைகளை செய்கிறார்கள். அவற்றை வயிறு முட்ட சாப்பிடுவார்கள் என்று பார்த்தால் அதுதான் நடப்பதில்லை. அந்த வடைகளை அந்திசாயும் மாலை வேளையில் நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுகிறார்கள். இப்படி செய்வதால், குடும்பத்தில் நிலவும் சண்டை சச்சரவுகள், பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும் என்று நம்புகிறார்கள் அவர்கள்.

4. தீபாவளி அன்று மாலையில் வீட்டின் பின்புறம் தீபம் ஏற்றுவது வழக்கம். இப்படி செய்வதால் எமதர்மனுக்கு திருப்தி ஏற்பட்டு விடும். அதனால் அந்த வீட்டில் யாருக்கும் அகால மரணம் ஏற்படாது. மேலும் யாருக்கும் நரக பயம் இல்லை என்கிறது பவிஷ்யோத்ர புராணம்.

யம தீபம் எதற்கு?: தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக மஹாளய பட்சம் காலத்தில், நம் முன்னோரை நினைத்து வழிபாடுகள் செய்வோம். அப்போது பூமிக்கு வரும் நம் மூதாதையர் நமது வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு மனத்திருப்தியுடன் மேலுலகத்துக்கு திரும்பிச் செல்வது, தீபாவளி - அமாவாசையன்றுதான். அப்போது அவர்களுக்கு இருட்டில் பாதை தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, தீபாவளிக்கு முதல் நாள் இரவு யம தீபம் என்ற ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். பெரிய அகல் விளக்கில் ஒரு தீபம் ஏற்றி, வீட்டு மொட்டைமாடி, மேற்கூரைகள்.. என உயரமான இடத்தில் தெற்குநோக்கி வைக்க வேண்டும். அப்போது,

ஸ்ரீ யமாய நம: ஸ்ரீ யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச சித்ர குப்தாய வை நம ஓம் நம: என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இதனால் யமபயம் நீங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar