திருவண்ணாமலை: திருவாசகப் பேரவை சார்பில், கிருபானந்த வாரியாரின் 20-ம் ஆண்டு குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அறுபடை வீடு முருக பக்தர்கள் குழுத் தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.