Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீரங்கம் சந்திர புஷ்கரணியில் ... இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் விளக்குபூஜை! இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசனுக்கும், வேம்பனுக்கும் டும் டும் டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2013
09:10

பல்லடம்: சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிமலையில் பட்டி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கு நேற்று ஊர் பொதுமக்கள் சார்பில், மேளதாளம் முழங்க, சீர்வரிசையுடன் விமரிசையாக திருமணம் நடத்தப்பட்டது. முன்னதாக, கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜை, ஹோமம், வேள்வி நடத்தப்பட்டது. சம்முகுட்டி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள், அரச மரம், வேம்பு மரத்துக்கு வேதம் முழங்கி, திருமணம் செய்து வைத்தனர். சுந்தர சிவாச்சல குருக்கள் கூறுகையில், ""அரசு, வேம்பு மரங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வளரும்போது, அதற்கு திருமணம் செய்து வைப்பது இந்து மதத்தின் மரபு. அரச மரம் சிவனின் வடிவம், வேம்பு பார்வதியின் வடிவம். அரச மரம், வேம்பு மரத்தின் கீழுள்ள விநாயகருக்கு 48 நாட்களுக்கு தினமும் ஒரு குடம் தண்ணீர் விட்டு மரங்களை 11 முறை சுற்றி வந்தால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு சிறப்படையும். மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் கை கூடும். நாம் மட்டுமன்றி நம்மை சார்ந்தவர்களும் நலம் பெறுவர், என்றார்.எஸ்.குமாரபாளையம் ஊராட்சி தலைவர் முத்துமாணிக்கம், செஞ்சேரிபுத்தூர் ஊராட்சி தலைவி சசிகலா, மலைப்பாளையம் ஊராட்சி தலைவி மனோன்மணி, மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் செயல் அலுவலர் சித்ரா உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக டிரைவர் மயில்சாமி செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar