ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 29 நாள்களுக்கு பின், கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு இணை கமிஷனர் செல்வராஜ் தலைமையில், பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 53 லட்சத்து 47 ஆயிரத்து 411 ரூபாய், 40 கிராம் தங்கம், இரண்டரை கிலோ வெள்ளி இருந்தன.