பாளையங்கோட்டை: கோமதிஅம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோவிலில் புதன்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.