Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் கோபுர கலசங்கள் திருட்டு சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2013
11:11

கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுடன் துவங்கியது. தேனியில் கணேச கந்த பெருமாள் கோயில், பெத்தாஷி விநாயகர் கோயில், தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் சாமி கும்பிட்டு கந்த சஷ்டி விரதம் துவக்கினர். கம்பம்: கம்பராயப் பெருமாள், வேலப்பர், கவுமாரியம்மன் மற்றும் ஆதிசக்திவிநாயகர் கோயில்களில் கந்த சஷ்டிவிழா துவக்கத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். முருகனுக்கு எடுக்கப்படும் விழாக்களில் சிறப்பானது கந்தசஷ்டியாகும். தமிழகம் முழுவதும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படும். கம்பத்தில் நேற்று காலை கம்பராயப் பெருமாள் கோயில், வேலப்பர் கோயில், மாரியம்மன்கோயில் மற்றும் ஆதிசக்திவிநாயகர் கோயில்களில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதிகாலை முதல் முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு சிறப்பு ஆராதனைகளும், அபிசேஷகங்களும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருள் பெற்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வரும் 8 ந் தேதி சூரனை, முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்சம்ஹார நிகழ்ச்சியும், மறுநாள் வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர். அன்னதானம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர். கூடலூர்: கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் விரதத்தை துவக்குவதற்காக காப்பு கட்டினர். இதற்கு முன்னதாக, சுவாமி சுந்தரவேலவருக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து மகளிர் குழுவினரின் தெய்வீகக் கூட்டுவழிபாடு பிரார்த்தனை நடந்தது. சுந்தரவேலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar