பதிவு செய்த நாள்
07
நவ
2013
10:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், திருக்கார்த்திகையை முன்னிட்டு, நவ., 17ல் லட்சதீபம் ஏற்றப்படுகிறது. இக்கோயிலில், கார்த்திகை உற்சவம் நவ., 12 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. உற்சவம் நடக்கும் 10 நாட்களும் பஞ்சமூர்த்திகள் காலை, மாலையில் ஆடி வீதிகளில் புறப்பாடு நடக்கும். நவ., 17 திருக்கார்த்திகையன்று லட்ச தீபம் ஏற்றப்படும். அன்றிரவு 7 மணிக்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று, தேரடி அருகில் சொக்கப்பன் ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருள்வர். உற்சவ நாட்களில், கோயில் சார்பில், தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் நடத்தப்படாது. ஏற்பாடுகளை, தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் ஜெயராமன் செய்து வருகின்றனர்.