பந்தலூர்: உப்பட்டி அருகே உள்ள பால முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழாநடை பெற்றது. பெருங்கரை கிராமத்தில் பால முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை நடை பெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த 18-ந் தேதி காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.