விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரர் உடனுறை புவனேஸ்வரியம்மன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலபைரவர் சிறப்பு சந்தன அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. முன்னதாக புவனேஸ்வரர், புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை சின்னதச்சூர் சங்கர் குருக்கள் செய்தார். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி, ரமேஷ் முன்னின்று செய்திருந்தனர். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.