Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெயில், மழையில் பாதிக்கப்படும் ... திருப்பூர் ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமண துறவிகளின் பயண வழித்தடயங்கள் பாழாகும் பாழிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2013
10:11

காஞ்சிபுரம்: பல்லவர் காலத்தில், சமண துறவிகளின் வழித்தங்கலுக்காக, சாலையோரங்களில் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட பாழிகள், பராமரிப்பில்லாமல் சீரழிந்து வருகின்றன. காஞ்சிபுரம் - வந்தவாசி, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு, செங்கல்பட்டு -- மதுராந்தகம், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் ஆகிய சாலைகளின் ஓரங்களில், சமணர்கள் அமைத்த, 90 பாழிகள் (வழித்தங்கல் மண்டபங்கள்) உள்ளன. இவற்றில், ஒரு அறை மற்றும் ஓய்வு எடுப்பதற்காக, கருங்கல்லில் உருவாக்கப்பட்ட சிறு படுக்கை உள்ளன. இவை, கலை நயமிக்க வேலைபாட்டுடன் அமைந்தவை.குளங்கள் ஒவ்வொரு பாழியையும் ஒட்டி, இரண்டு முதல் மூன்று ஏக்கர் பரப்பளவில் குளம் வெட்டப்பட்டுள்ளது. புனிதப்பயணம் மேற்கொண்ட சமணத் துறவிகள், இவற்றில் நீராடி, கருங்கல் அறையில் தங்கி ஓய்வு எடுத்து, மீண்டும் பயணத்தை தொடர்ந்துள்ளனர். பாழிகளும் அதை ஒட்டிய குளங்களும், இப்போது வரலாற்று தடயங்களாக உள்ளன. ஊர் ஊராய் அலைந்து இந்த பாழிகள், பல்ல வர்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என, வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். கல்வெட்டுக்களும், இவை பற்றி பேசுகின்றன. பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் ஆட்சியில், சமணத் துறவிகள் ஊர் ஊராக சென்று, கருத்துக்களை பரப்பினர். இதற்காக நடை பயணம் செய்தனர். இவர்கள், செல்லும் வழியில் தங்குவதற்கு வசதியாக, சாலை ஓரம் கட்டப்பட்டவைதான் பாழிகள் என்று, அழைக்கப்படுகின்றன. இவை, பய ணிக்கும் துறவிகளின் ஓய்விற்கும், தியானத்திற்கும் பயன்பட்டன.நடைபயணிகளுக்கு...வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாழிகள், தற்போது சீரழிந்து வருகின்றன. நல்ல நிலையில் உள்ள சில பாழிகளை, தற்போது திருப்பதி, திருத்தணி, மேல்மருவத்துார், சபரிமலை ஆகிய கோவில்களுக்கு நடை பயணமாக செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.வழித்துணையாக்கலாம்பழுதடைந்து இடிந்து விழும் நிலையில், சில பாழிகள் உள்ளன. சில இடங்களில், இவை ஆக்கிரமிக்கப்பட்டுஉள்ளன.கரு தொல்லியல் துறை இவற்றை மீட்டு, வரலாற்று சின்னங்களாக பராமரிக்கலாம். அதே நேரத்தில், நடை பயணமாக கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் பயன்பாட்டிற்கும் கொண்டு வரலாம். வரலாற்று சின்னங்களான பாழிகளை, சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டும். பராமரிப்பு யாரிடம் : காஞ்சிபுரம் அறநிலையத் துறை அதிகாரி தியாகராஜன் கூறுகையில், சாலை ஓரங்களில் உள்ள பாழிகள், அறநிலையத் துறை பராமரிப்பில் இல்லை. கிராம நிர்வாக அலுவலகங்களில் உள்ள ஆவணங்களிலும், வரைபடத்திலும், பொது இடங்களில் பாழிகள் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை, தற்போது வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளன, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar