Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி மெட்டீரியல் ரோப்கார் இயக்கம் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
20 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் காணாத மாவூற்று வேலப்பர் கோயில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2013
11:12

ஆண்டிபட்டி:மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் நீர் சுனையாக மாறி உள்ளது.கோடையிலும் , இந்த சுனையில் வற்றாத நீர் சுரந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் சுனையில் நீராடி, முருகனை வழிபடுவதால் தீராத நோய்கள், மனக்கவலைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் வந்து வேலப்பரை வழிபட்டு செல்வர். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்வர்.நேர்த்திக்கடனாக காவல் தெய்வம் கருப்பசாமிக்கு ஆட்டுக்கிடா வெட்டி அன்னதானம் வழங்குவர். இவ்வளவு சிறப்பு கொண்ட கோயில் இந்து அறநிலையத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல ஆண்டுளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர் கம்பட்டி முத்துவன்னியன் கூறியதாவது: கோயில் கோபுரத்திற்கும், கர்ப்பக்கிரகத்திற்கும் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.வேலப்பர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 20 ஆண்டுக்கும் மேலாகிறது. மராமத்து பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக பக்தர்கள், இந்து அறநிலையத்துறையை வலியுறுத்தி வருகின்றனர்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar