வேதாரண்யம்: வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு புனித நீர்ந் அடங்கிய குடங்கள் மற்றும் 1008 சங்குகளை வைத்து வேதமந்திரங்கள் ஓதி அபிசேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சன்னதியில் உள்ள சர விளக்குகள் அனைத்திலும் தீபம் ஏற்றி வேதாரண்யேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.