Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம் ஆறுமுகநேரியில் திருவாதிரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்கோயில் தேர் நிறுத்தத்திற்கு ரூ.8 லட்ச ரூபாய் செலவில் நிரந்தர செட்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2013
10:12

தூத்துக்குடி: ஒவ்வொரு தேரோட்டத்திற்கும் தற்காலிக செட் அமைக்க சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வருவதால் நிரந்தரமாக தேருக்கு செட் 8 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இன்னும் 15 நாளில் நிரந்தர செட் அமைக்கப்பட்டு விடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற கோயிலான சங்கரராமேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் பெரிய அளவில் நடந்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உண்டியல் வருவாயும் ஒவ்வொரு முறை எண்ணும் போதும் அதிகமாகி வருகிறது. கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் போன்றவை அனைத்தும் நன்கொடையாளர்கள் மூலம் தான் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்காக அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் கோயிலில் உள்ள தேர் செட் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் தேர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் கொண்டிருந்தது குறித்து பக்தர்கள் வேதனை வெளியிட்டனர். பக்தர்களின் வேதனை குரல் தினமலரில் செய்தியாக வெளியாகியது. இது சம்பந்தமாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது; தூத்துக்குடி சிவன் கோயிலில் நடக்கும் சித்திரை மற்றும் ஐப்பசி திருவிழாக்களின் போது ஆண்டுக்கு இரண்டு முறை சின்ன தேர் ஓட வேண்டியுள்ளது. சித்திரை தேரோட்டத்தின் போது விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரும், ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டத்தின் போது பாகம்பிரியாள் அம்மனும் இந்த தேரில் வீதி உலா வருதல் நடந்து வருகிறது. தேரோட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர் பாதுகாப்பாக நிற்கும் பொருட்டு தற்காலிக செட் அமைக்கப்பட்டு வந்தது. இந்த செட்டிற்காக ஒவ்வொரு முறையும் சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வந்தது. ஆண்டுக்கு இதுபோன்ற செலவுகளுக்கு மட்டும் சுமார் 75 ஆயிரம் செலவு செய்ய வேண்டியிருந்தது. ஆண்டுதோறும் நடக்கும் வீண் செலவுகளை தடுக்கும் பொருட்டு சிறிய தேருக்கு நிரந்தரமாக செட் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நன்கொடையாளர் மூலம் 8 லட்ச ரூபாய் செலவில் நிரந்தர செட் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு புறமும் பில்லர் அமைத்து செட் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் சங்கரராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்மன் செல்லக் கூடிய சித்திரை திருவிழா தேரோட்ட பெரிய தேருக்கும் நிரந்தரமாக செட் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar