பதிவு செய்த நாள்
11
டிச
2013
11:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துரில் சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்யா சாய் பாபா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சாய்ராம் ராம்ஜி ஆன்மிக சறிப்பு, ஷிர்டி சாய் பாபாவின் சத்சரிதப்பாராயணம், மாத்ருபூஜை, கலை நிகழ்ச்சிகள், திருவிளக்கு பூஜை, பஜனை , ஊர்வலம் நடந்தன. 11 நாட்கள் நடந்த விழாவில், மரக்கன்று நடுதல், அன்னதானம், இலவச உடை தானம், ஆகியன நடந்தது. ஏற்பாடுகளை,கன்வீனர் ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர்கள் மணியம்மாள், வெங்கட்ரமணன், அமுதா, ராஜேந்திரன் செய்திருந்தனர்.