வேடசந்தூர்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோயில்களில் விளக்கு பூஜை தொடங்கியது. வேடசந்தூர் மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், ஆர்.எச். காலனி விநாயகர் கோயில் மற்றும் குட்டம் காளியம்மன்கோயில் உட்பட பல ஊர் கோயில்களில் விளக்கு பூஜையை பெண்கள் நடத்தினர். தை முதல்நாள் வரை தொடர்ந்து இந்த பூஜை நடைபெறும்.