Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடியில் அஷ்டமி சப்பர விழா திருமலை கோயிலில் கால பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பூண்டி மாதா ஆலயத்தில் "கிறிஸ்துமஸ் கூட்டு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2013
11:12

தஞ்சாவூர்: தஞ்சையில், பூண்டி மாதா ஆலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நடந்த சிறப்பு கூட்டு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு, கிறிஸ்துமஸ் பண்டிகை தின விழா வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக, ஆலயத்தின் அருகில் அலங்கார குடில் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 11.40 மணிக்கு, ஆலயத்தின் முகப்பில் இருந்து பேராலய அதிபர் ஜெபாஸ்டின் தலைமையில் அருட் தந்தையர்கள் அருள்சாமி, சூசைமாணிக்கம், மரியதாஸ், பிரேம்குமார், சின்னப்பராஜ் ஆகியோர் வந்தனர். ஆலய திருப்பலி மேடையில், அருட்தந்தையர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, வரவேற்றனர். மேடையில் வைத்திருந்த குத்துவிளக்கை பேராலய அதிபர் ஜெபாஸ்டின் மற்றும் அருட்தந்தையர்கள் ஏற்றி வைத்தனர். இதையடுத்து, கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, பேராலய அதிபர் ஜெபாஸ்டின் சிறப்பு சொற்பொழிவாற்றினார். பின்னர், ஆலய மணி ஒலிக்கப்பட்டது. இயேசு அவதரிப்பை குறிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை, திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு காண்பித்தார். அலங்கார குடியில் குழந்தை இயேசு சொரூபத்தை வைத்து, குடிலை புனிதம் செய்தார்.

அதிபர் ஜெபாஸ்டின், துணை அதிபர் அருள்சாமி ஆகியோர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். இதேபோல, மைக்கேல்பட்டி, பூதலூர், முத்தாங்கிபட்டி, மேகலத்தூர், மாரனேரி, மணத்திடல் மற்றும் தஞ்சை நகரத்திலுள்ள தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. தஞ்சையில், பூக்கார தெருவிலுள்ள திருஇருதய பேராலயம், மகர்நோன்பு சாவடி மேட்டுப்பிள்ளையார் கோவில் தெரு புனித சூசையப்பர் ஆலயம், வடக்குவாசல் புனித அருளானந்தர் பேராலயம், குழந்தை இயேசு ஆலயம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரோட்டிலுள்ள புனித லூர்து அன்னை, அண்ணா நகர் புனித செபஸ்தியார் ஆலயங்களிலும் நடந்த கூட்டுப்பிரார்த்தனையில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar