பொன்னேரி: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் விவேகானந்தர் ரதம் பொன்னேரிக்கு புதன்கிழமை வந்தடைந்தது. அதனை அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்றனர். விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ராமகிருஷ்ண மிஷன் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விவேகானந்தர் ரதம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றது.