Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெடிமேடு மயத்தால் மங்கும் மார்கழி: ... லட்டு, தரிசன சேவை குறைபாட்டால் திருமலை பக்தர்கள்... அவதி! லட்டு, தரிசன சேவை குறைபாட்டால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயிலில் புத்தாண்டு பூஜைக்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2013
10:12

மதுரை: புத்தாண்டையொட்டி, ஆகம விதிகளுக்கு முரணாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கருவறை பூஜை செய்ய, தடை விதிக்கக்கோரி தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது. சாத்தான்குளம், பண்ணைவிளையை சேர்ந்த சுந்தரவேல் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தினமும் காலை 5.10 முதல் இரவு 9 மணி வரை 14 வகை பூஜைகள் நடக்கின்றன. வேதம், ஆகம விதிப்படி இரவு 1:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை எந்த பூஜையும் செய்யக் கூடாது. விழாக் காலங்களில், சுவாமி அலங்காரத்திற்காக, கருவறை கதவை முன்கூட்டியே திறக்கலாம். ஆங்கில புத்தாண்டையொட்டி (2014) ஜன.,1 இரவு 12:00 மணிக்கு கர்ப்பகிரகத்தை திறந்து, கருவறை பூஜை செய்ய, இணை கமிஷனர் ஏற்பாடு செய்துள்ளார். ஆங்கில புத்தாண்டு பிறப்பு, இந்துக்களின் விழா அல்ல. குமார தந்திர வழிபாட்டு முறை மற்றும் உப ஆகம விதிகள்படி பூஜைகளை, சூரிய உதயத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பகிரக கதவை 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன் தான், திறக்க வேண்டும். எனவே, புத்தாண்டிற்கு இரவு 12:00 மணிக்கு கருவறை பூஜை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், என மனுவில் குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.மகாதேவன் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.பாலகிருஷ்ணன் ஆஜரானார். விசாரணையை, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar