வால்பாறை: வாழைத்தோட்டம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் திருவிழாவில் ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்து ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். வால்பாறை நகர் வாழைத்தோட்டம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலின் 54ம் ஆண்டு திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை நடந்த அன்னதானவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4.00 மணிக்கு ராஜிவ் நகர் , மாரியம்மன் கோவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். விழாவில் நேற்று மாலை 6.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.