Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிள்ளையார்பட்டியில் குவிந்த ... பழநி பாதயாத்திரை பக்தர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோவில், அம்மன் கோவிலில் புத்தாண்டு தினத்தில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2014
12:01

தஞ்சாவூர்: புத்தாண்டு தினத்தையொட்டி பெரியகோவில் மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை பெரியகோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக வழக்கமாக காலை, 6 மணிக்கு திறக்கப்படும். மதியம், 12.30 மணிக்கு சாத்தப்படும். தொடர்ந்து, 4 மணிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, இரவு, 8.30 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பெரியகோவிலில் பொதுவாக, மார்கழி மாதத்தையொட்டி, 30 நாட்களும் சிறப்பு பூஜை நடத்தப்படும். அதன்படி மார்கழி மாதம் துவங்கியது முதல், காலை ஒரு மணி நேரம் முன்னதாக, 5 மணிக்கே கோவில் திறக்கப்பட்டு வருகிறது. பின்னர் காலை, 5.30 மணிக்கு மார்கழி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மூலவரான பிரகதீஸ்வரருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதன்படி, நேற்றும் பூஜைகள் நடந்தன. புத்தாண்டு தினமான நேற்று காலை, 7.30 மணிக்கு பெரியகோவிலில் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் வெளியூர் பயணிகள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இதேபோல தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் அனுமன் ஜெயந்தி, ஆங்கில புத்தாண்டையொட்டி தஞ்சை மேலவீதியிலுள்ள மூலை அனுமார்கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் மூல நட்சத்திரத்தில் பிறந்த பக்தர்கள், ராசி, நட்சத்திரம் லக்னத்துக்கு பரிகாரம் செய்து, அனுமார் ஸ்வாமியை வழிபட்டனர். அருகிலுள்ள வீரஆஞ்சநேயர் ஸ்வாமி கோவிலிலும், சொர்க்கவாசல் அதிகாலை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தேங்காய் துருவல் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar