பழநி: பழநி ஸ்ரீ ரமண மந்திரம் சார்பில், பகவான் ரமண மகரிஷி 134 வது ஜெயந்தி விழா சாய்சதனில் நடந்தது. தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் காளிமுத்து வரவேற்றார். போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் முன்னிலை வகித்தார். மதுரை ரமண ஒளி ஆசிரியர் பிரணதார்த்திஹரன், "நல்தவம் அதுவே என்ற தலைப்பில் பேசினார். பொருளாளர் பேபிராஜா நன்றி கூறினார்.