மஞ்சூர்: மஞ்சூர் சக்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு பூக்குண்ட விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நாளை நடை பெறுகிறது. விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு விநாயகர் மற்றும் அய்யப்ப சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், தீபா ராதனைகளும் நடை பெறுகின்றன.