Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்குதீர்த்த குளத்தை சீரமைக்கும் ... ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகரம் சேஷசமுத்திரம் கோவில் தேர் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2014
11:01

விழுப்புரம்: சங்கராபுரம் அடுத்த அகரம் சேஷசமுத்திரம் ஆதிதிராவிடர் மக்கள் கோவில் தேரை ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.சங்கராபுரம் அடுத்த அகரம் சேஷசமுத்திரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடத்துவது தொடர் பாக இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்தது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை.இதனையடுத்து, இரு ஆண்டுகளாக தேரோட்டம் நடத்த முடியாத நிலை நிலவுகிறது. கோவில் தேரை ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைக்கப் போவதாக கூறி, சேஷசமுத்திரம் ஆதிதிராவிடர் மக்கள் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.அப்போது, அவர்களுடன் வந்த வி.சி., கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன், நிருபர்களிடம் கூறியதாவது: சங்கராபுரம் அடுத்த அகரம் சேஷசமுத்திரம் ஆதிதிராவிடர் மக்கள் சார்பில் கோவில் தேரோட்டம் நடத்த, கடந்த 2 ஆண்டுகளாக ஜனநாயக முறை யில் தொடர் போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்க வில்லை.இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததைக் கண்டித்து, கோவில் தேரை ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைக்கவும், இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 79 குடும்பத் தினரும், புத்த கோட்பாடுகளை ஏற்று மதம்மாறிடவும் தீர்மானித்துள்ளனர்.சேஷசமுத்திரம் கிராமத்தில் ஆதிதிராவிட சமூக மக்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டித்து, சங்கராபுரம் பகுதியில் வரும் 10ம் தேதி வி.சி., கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. இதே போல், ஆதி திராவிடர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து, மாவட் டம் முழுவதும் வரும் 30ம் தேதி மறியல் நடத்தப்படும்.இவ்வாறு சிந்தனைச்செல்வன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேருக்கு டிச., 6ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar