Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கர்ப்பிணிகள் "டிவி தொடர் ... பழநி தைப்பூச விழாவில் கோயில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபிராமி அம்மன் கோயில் சன்னதி முகப்பு நிலை கால் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2014
11:01

திண்டுக்கல்: புதிதாக புனரமைக்கப்பட்டு வரும் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில், காளஹத்தீஸ்வரர் ட்பட அனைத்து சன்னதிகளின் முகப்பு நிலை கால் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்காக புனரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, சிதிலமடைந்திருந்த கோயிலின் அனைத்து பகுதிகளும் முழுமையாக அப்புறப் படுத்தப்பட்டன. கோயிலில் இடம்பெறும் நான்கு சன்னதிகள் 12 அடி உயரத்தில், அலங்கார வரிவர்க்க கற்கலால் உருவாக்கப்படுகிறது. இதுவரை 6 அடி உயரத்திற்கான பணி நிறைவு பெற்றுள்ளது. ஒவ்வொரு வரிவர்க்க கற்களிலும், மலரும் தாமரை பூக்களுடன் பல்வேறு விதமான சித்திரவேலைபாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருநிலை கால் என அழைக்கப்படும் முகப்பு நிலை கால், ஒவ்வொரு சன்னதிகளில் அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. அபிராமி அம்மன் கோயிலின் நாயகரான காளஹத்தீஸ்வரர் சன்னதியில் முதல் முகப்பு நிலை கால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏழு அடி உயரம், நான்கு அடி அகலத்திலான கற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்களிலும் கொடி கருக்கு வேலை பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள இரண்டு வாசல்களை இந்த அழகிய கற்கள் தாங்கி நிற்கும். இந்த பணி நிறைவடைந்தவுடன் 5,600 சதுர அடியில் மகா மண்டபம் கட்டப்படவுள்ளது. இதற்காக விரிசல் இல்லாத 52 தூண்கள் தேர்வு செய்யப்பட்டு சித்திர வேலைபாடுகள் செதுக்கும் பணி துவங்க உள்ளது. ஒவ்வொரு தூணிலும் அஸ்வபாதம்(குதிரையின் கால்பகுதி அடையாளம்), நாகபந்தம்(பாம்பு படம் எடுத்து நிற்கும் சிற்பம்), இடைக்கட்டு (அழகிய ஒற்றை வளையம்), போதியல் (வாழைப்பூவின் முனைப்பகுதி) சித்திரங்கள் இடம்பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar