குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் "மிட்டாய் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2014 11:01
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மிட்டாய் வைத்து வழிபாடு நடத்தினர். தைப்பூசத்தை முன்னிட்டு காரைக்குடி, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு செல்கின்றனர். தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பழநி முருகன் ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் குழந்தை வடிவமாக காட்சி அளிக்கிறார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநிக்கு செல்லும் பக்தர்கள் இக்கோயிலுக்கு சென்று குழந்தை வேலப்பரை வழிபடுகின்றனர். பக்தர்களின் குறைகள் நிவர்த்தியாகும்போது, குழந்தைகளுக்கு பிடித்த மிட்டாய் வகைகளை வைத்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர். குழந்தை வேலப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்பட்டது.