வாடிப்பட்டி: குலசேகரன்கோட்டையில் மதுரை திண்டுக்கல் தேசிய நான்குவழிச்சாலையில் நவஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. தைமாத பிறப்பு பொங்கல் விழாவையொட்டி அனுமனுக்கு 10008 கரும்புகளால் அலங்காரம் செய்யப்பட்டது. விழாவையொட்டி மஞ்சள், வாசனைப்பொடி, பால், தயிர், இளநீர் தேன், சந்தனம், அரிசிமாவு, பஞ்சாமிர்தம் அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.