திருவண்ணாமலை: ஜனவரி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் நேற்று கிரிவலம் வந்தனர். காலை 7.30 முதல் வியாழக்கிழமை (ஜனவரி 16) காலை 10.33 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.அதன்படி புதன்கிழமை காலை முதலே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.