Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் மரகதலிங்கம் மாயம்: ... ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலாயுதசாமி கோவில் தேரோட்டம் நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2014
11:01

கிணத்துக்கடவு :கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் மூன்றாம் நாள் தேரோட்டமான நேற்றுமுன்தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா கோஷமிட்டுவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றுத்துடன் கடந்த 11ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 17ம் தேதியன்று துவங்கியது. கோவில் உற்சவரான முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பிரகாரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, உற்சவர் கோவில் அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர், 21 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் வெள்ளிக்கவசத்துடன் வேலாயுதசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் "அரோகரா கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்து, பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு வழியாக சிவலோகநாதர் கோவில் வளாக "அக்னி மூலையில் தேர்நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளான 18ம் தேதியன்று மாலை 5.00 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு, தேரோடும் வீதி வழியாக கிருஷ்ணசாமிபுரம் வீதியில் "வாயு மூலைக்கு இழுத்துச்சென்று மாலை 6.30 மணிக்கு நிலை நிறுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களின் தரிசனத்திற்காக நிறுத்தப்பட்ட தேர், மூன்றாம் நாளான நேற்றுமுன் தினம் மாலை 5.00 மணிக்கு, வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரிவெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் வெண்மணி, கிணத்துக்கடவு ஒன்றியக்குழுத் தலைவர் ராஜமாணிக்கம், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். பின் தேர் பொதுமக்களால் வடம் பிடிக்கப்பட்டு, கோவில் அடிவாரத்தை மாலை 7.30 மணிக்கு வந்தடைந்தது. இரவு முழுவதும் தேர் நிற்பதால், பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.தேரோட்டத்தின் போது, தேர் செல்லும் பாதையில் உள்ள மின்கம்பிகளை மின்வாரியத்தினர் கழற்றி மாற்றினர். பஸ் போக்குவரத்து மாற்றுப்பாதைக்கு மாற்றிவிடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar