விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி ரதசப்தமி மகோற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி, 6ம் தேதி காலை 6 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சூரிய பிரபை அலங்காரம், காலை 9 மணிக்கு அனுமந்தவாகனம் அலங்காரம், காலை 10:30 மணிக்கு சேஷ வாகனம் அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, பகல் 12:30 மணிக்கு கருடவாகன சேவை அலங்காரமும், மாலை 4 மணிக்கு யானை வாகன அலங்காரம், மாலை 5:30 மணிக்கு கற்பக விருட்ஷம் அலங்காரம், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் கவியரசு, திருமஞ்சன கைங்கர்ய தாரர்கள், வாசு பட்டாச்சாரியார், கோவில் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.