கோவில்பட்டி: பத்திரகாளியம்மன் கோயிலில் நேற்று வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு மூலஸ்தான அபிஷேகமும், தொடர்ந்து கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றன.