Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை முருகன் கோவில் மகாதரிசனம்! சொர்ண கர்ஷண பைரவர் கோவிலில் சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா! சொர்ண கர்ஷண பைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
85 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.. சிவன்மலையில் தெப்ப உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜன
2014
10:01

காங்கயம் : சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மீட்கப்பட்டதால், 85 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு தைபூச தேர்த்திருவிழா தெப்ப உற்சவம் குளத்தில் நேற்று நடந்தது. சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைபூச தேர்த்திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. தேரோட்டம் கடந்த 17, 18, 19ம் தேதிகளில் நடந்தது. நேற்று பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடந்தது. இக்கோவிலுக்கு சொந்தமான நந்தவன தோட்டம் மற்றும் தெப்பக்குளம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக, கடந்த 85 ஆண்டுகளாக, உற்சவருக்கு, ரோட்டில் நின்று தீபாராதனை காட்டி, பெயரளவுக்கு தெப்ப உற்சவம் நடந்து வந்தது. இந்நிலையில், பழைய ஆவணங்களை ஆய்வு செய்தபோது, 2.25 ஏக்கர் பரப்பளவில் நந்தவன தோட்டம், தெப்பக்குளம் இருப்பது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட இடத்தை கண்டறிந்த அதிகாரிகள், கடந்தாண்டு, மே 17ம் தேதி அப்பகுதியை மீட்டனர். இந்தாண்டு தைபூச தேர்த்திருவிழா, தெப்ப உற்சவம் பழைய இடத்தில், முறைப்படி கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வாஸ்து சாந்தி, நேற்று காலை 6.30 மணிக்கு தெப்பக்குளத்தில் கணபதி ஹோமம் நடந்தது. 9.30 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியம், நந்தவன தோட்டத்தில் பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமி தெப்பக்குளத்தை சுற்றி வந்து, தெப்ப உற்சவம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"85 ஆண்டுகளுக்கு பிறகு, கோவில் நந்தவன தோட்டத்தில் தெப்ப உற்சவம் நடந்துள்ளது. சிதிலமடைந்துள்ள தெப்பக்குளம், உபயதாரர் நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்டு, அடுத்தாண்டு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar